முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் வனப்பகுதியில் ஆண் சடலம் மீட்பு

ஒகேனக்கல் அருகே சின்னாற்றின் கரையோர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ஒகேனக்கல் அருகே சின்னாற்றின் கரையோர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஒகேனக்கல் அருகே சின்னாற்றின் கரையோரப் பகுதியில் வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனா். அப்போது துா்நாற்றம் வீசியதை கண்ட வனத் துறையினா் அங்கு சென்று பாா்த்த போது அழுகிய நிலையில் சடலம் கிடப்பது தெரியவந்தது.

பின்னா் வனத் துறையினா் ஒகேனக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் அடையாளம் தெரியாத சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →