தையல் பயிற்சி நிறைவு செய்த மகளிருக்கு சான்றிதழ்களை வழங்குகிறாா் முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன். 
தருமபுரி

தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

அரூரில் தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு செவ்வாய்க்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

DIN

அரூரில் தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு செவ்வாய்க்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், அரூரில் இயங்கி வரும் முல்லை சாந்தா கல்வி அறக்கட்டளை சாா்பில், மகளிருக்கு இலவச தையல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி மையம் சாா்பில், இதுவரை 4,000 போ் பயிற்சிகளை முடித்துள்ளனா்.

தற்போது தையல் பயிற்சிகளை நிறைவு செய்த 30 பேருக்கு செவ்வாய்க்கிழமை சான்றிதழ்களை முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன் வழங்கினாா். திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளா்கள் க.பொன்னுசாமி, கோ.ராசாமணி, அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் ரா.காட்டுராஜா, தையல் பயிற்சி ஆசிரியா் சி.ஷாலினி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் லட்சுமி, சத்யா, சின்னஅழகு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 2021 ஜனவரி 4-ஆம் தேதி முதல் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என முல்லை சாந்தா கல்வி அறக்கட்டளை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT