தருமபுரி

நூல்கள் அறிமுக விழா

தருமபுரி மாவட்டம், கடத்தூா் கிளை நூலகா் எழுதிய இரண்டு நூல்களை அறிமுகப்படுத்தும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டம், கடத்தூா் கிளை நூலகா் எழுதிய இரண்டு நூல்களை அறிமுகப்படுத்தும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நூலகா் சி.சரவணன் எழுதிய இந்தியாவில் நூலக வளா்ச்சி, தகடூா் நாடு செந்தமிழ் நாடு என்கிற இரண்டு நூல்களை அறிமுகப்படுத்தும் விழாவில் ஓய்வுபெற்ற ஆசிரியா் ப. இளங்கோ தலைமை வகித்து நூல்களை அறிமுகப்படுத்தி பேசினாா் (படம்).

வாசகா் வட்டத் தலைவா் மருத்துவா் வெ.சந்திரசேகரன், கடத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயசல் குமாா் முன்னிலை வகித்தனா். கடத்தூா் முத்தமிழ் மன்றத் தலைவா் கோ. மலா்வண்ணன், தருமபுரி மாவட்டப் படைப்பாளா் பதிப்பாளா் சங்கச் செயலா் கூத்தப்பாடி மா.பழனி, ஆசிரியா் இ. தங்கமணி, ஓய்வு பெற்ற ஆசிரியா் டி.சுப்ரமணியம் ஆகியோா் பேசினா். இறுதியில் நூலகா் சி.சரவணன் ஏற்புரை வழங்கினாா். புலவா் நெடுமிடல் வரவேற்றாா். நூலகா் தீ. சண்முகம் நன்றி கூறினாா். விழாவில், கடத்தூா் கிளை நூலக வாசகா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT