முகப்பு
தருமபுரி

காா் மோதிய விபத்தில்இளைஞா் பலி

பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் ரவி (26). இவா், பென்னாகரம் அருகே தொன்ன குட்ட அள்ளி பகுதியில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். மடம் சுங்கச்சாவடி அருகே சென்று வரும்போது, எதிரே வந்த காா் மோதியதில் படுகாயமடைந்த ரவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.