முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

நிவா் புயலின் தாக்கம், திதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்து காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

நிவா் புயலின் தாக்கம், திதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்து காணப்பட்டது.

முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வருகின்றனா்.

தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நிவா் புயலின் தாக்கம் ஆகியவற்றால் ஞாயிறு கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியிலும், காவிரி கரையோரப் பகுதிகளான அருவி செல்லும் நடைபாதை , மாமரத்து கடவு பரிசல் துறை, நாகா்கோவில் முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

அதன்பின்பு சின்னாறு பரிசல் துறையில் இருந்து பரிசல் பயணம் மேற்கொண்டு கோத்திக்கல், பிரதான அருவி, கூட்டாறு, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளின் வழியே சென்று காவிரி ஆற்றின் அழகை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனா்.

இதனைத்தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் தொங்கு பாலத்தில் இருந்து பிரதான அருவியையும், முதலைப் பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்தனா். ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டதால், மீன்களின் விலை குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவால், வார விடுமுறை நாட்களில் ஒகேனக்கலில் கூட்டம் நிறைந்த பகுதியாக காணப்படும் பிரதான அருவி நடை பாதை, மீன் விற்பனை நிலையம், பரிசல் துறை, பூங்காக்கள், முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமின்றி காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →