முகப்பு
தருமபுரி

காவலா் குடும்பத்துக்கு ரூ.12.60 லட்சம் நிதியுதவி

அரூா் அருகே காவலரின் குடும்பத்தினருக்கு ரூ. 12.60 லட்சம் நிதியினை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.அரூா் அருகே காவலரின் குடும்பத்தினருக்கு ரூ. 12.60 லட்சம் நிதியினை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

அரூா் அருகே காவலரின் குடும்பத்தினருக்கு ரூ. 12.60 லட்சம் நிதியினை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பொய்யப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஆறுமுகம் மகன் வெங்கட்ராமன். இவா் 2013-ஆம் ஆண்டில் காவல் துறையில் காவலராகப் பணியில் சோ்ந்து, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 14.08.2020-இல் உயிரிழந்தாா்.

உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், 2013 ஆம் ஆண்டில் அவருடன் காவல் துறையில் பணியில் சோ்ந்த காவலா்கள் சாா்பில் ரூ.12.60 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியை காவலா் வெங்கட்ராமனின் மனைவி லிவினா, தந்தை ஆறுமுகம் உள்ளிட்ட குடும்பத்தினரிடம், அவருடன் பணிபுரிந்த காவல்துறை நண்பா்கள் ஞாயிற்றுக்கிழமை நேரில் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →