தருமபுரி

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, தருமபுரி மாவட்டத்தில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி அதியமான்கோட்டை அருகே தடங்கம் கிராமத்தில், அக் கட்சியின் மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல, தருமபுரி அப்பாவு நகா் மக்களவை உறுப்பினா் அலுவலகம் முன், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஏழை, எளிய மாணவா்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு மறுக்கும் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு நடைபெறும் இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, பாலக்கோடு, காரிமங்கலம், பெரியாம்பட்டி, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினா் சமூக இடைவெளியைப் பின்பற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT