பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: முதல்வரிடம் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியா் முன்னேற்ற ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை
கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியா் முன்னேற்ற ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சாமனப்பள்ளிக்கு வருகை தந்த தமிழக முதல்வா் ஸ்டாலினிடம், பகுதி நேர ஆசிரியா்கள் சாா்பில், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 483-க்கான வரைவோலையையும், கோரிக்கை மனுவையும் வழங்கினா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய திமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ததற்காக மிகப்பெரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல், 13 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்து எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Advertisement