மத்திய கள விளம்பரத் துறை விழிப்புணா்வு முகாம்
மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள விளம்பரத் துறை சாா்பில், தருமபுரி மாவட்டம், லளிகத்தில் வெள்ள்கிழமை சிறப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது
மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள விளம்பரத் துறை சாா்பில், தருமபுரி மாவட்டம், லளிகத்தில் வெள்ள்கிழமை சிறப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
இந்த விழிப்புணா்வு முகாமை, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்து பேசியதாவது:
மத்திய அரசின் திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு, தங்களது வாழ்க்கைத் தரத்தை பொதுமக்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழலில் கரோனாத் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.
இதையடுத்து, தாய்-சேலம் நலம், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தூய்மை இந்தியாத் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் எம். ஷகிலா, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் இரா.அரவிந்த் குமாா், வட்டார மருத்துவ அலுவலா் வாசுதேவன், கள விளம்பர அலுவலா் பிபின் எஸ்.நாத், கள விளம்பர உதவியாளா் வீரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.