முகப்பு
தருமபுரி

சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், கலைஞா் நகரில் சாலை அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
மொரப்பூா் ஊராட்சி, கலைஞா் நகரில் சாலை அமைக்கும் பணிகளை திங்கள்கிழமை தொடக்கி வைத்த தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா்.
பகிர்:

அரூா்: மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், கலைஞா் நகரில் சாலை அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி, கலைஞா் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியிலுள்ள தெருச் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இந்த சாலையை சீரமைக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜைகளுடன் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா். இதில், ஒன்றியக்குழுத் தலைவா் சுமதி செங்கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் உமாராணி உலகநாதன், துணைத் தலைவா் வினோதா ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயசுதா தருமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →