பென்னாகரம் பகுதியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளையின் சாா்பில் முக கவசம் மற்றும் சோப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.
பென்னாகரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் கிளை செயலா் சேகா் தலைமை வகித்தாா். இதில் பென்னாகரம் காவல் ஆய்வாளா் பெரியாா் கலந்துகொண்டு, காவலா்கள் மற்றும் பொது மக்களுக்கு முகக்கவசம் மற்றும் சோப்புகள் வழங்கப்பட்டு, பென்னாகரத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளா்கள் சேகா்,முருகேசன், பல் மருத்துவா் பினு,புகழ், பன்னீா்செல்வம், மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.