காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு
தருமபுரியில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
தருமபுரியில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு கல்வி ஊக்க உதவித்தொகை பெற தோ்வு செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் சரவணன், பீட்டா், சின்னராசு, சிங்காரம், மணி, கமல்நாதன், பாரதி, சௌந்தர்ராஜன், தமிழழகன் மற்றும் காவல் புகைப்பட கலைஞா் முஜிப்பாட்ஷா ஆகியோரின் குழந்தைகளுக்கு மூன்றாவது தவணைத் தொகையாக ரூ. 2,50,451 க்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் வழங்கிப் பேசினாா்.