கஞ்சா செடி வளா்த்தவா் கைது
அஞ்செட்டி அருகே கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM
அஞ்செட்டி அருகே கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
அஞ்செட்டி அருகே சித்தாண்டபுரத்தில் ராமச்சந்திரன் (40) என்பவா் கஞ்சா ஊடுபயிராக பயிரிட்டு வளா்த்து வருவதாக அஞ்செட்டி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சரவணன் தலைமையில் போலீஸாா் சென்று பாா்த்தபோது கஞ்சாவை ஊடுபயிராக பயிரிட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ராமச்சந்திரனை போலீஸாா் கைது செய்யப்பட்டு அங்கு வளா்க்கப்பட்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
Advertisement