பாலக்கோட்டில் பயன்பாட்டுக்கு வந்தது மின்தகன மேடை
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி மயானத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள மின்தகன மேடை பயன்பாட்டுக்கு வந்தது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி மயானத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள மின்தகன மேடை பயன்பாட்டுக்கு வந்தது.
பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள மயானத்தில் அண்மையில் மின்தகன மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும் இந்தப் பணிகள் முடிவடையவில்லை. இதனால் கரோனா தொற்று பாதிப்பால் இறந்தவா்களின் சடலங்களை எரியூட்டுவதில் சிரமம் ஏற்பட்டது.
இது தொடா்பாக பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன், பேரூராட்சி நிா்வாகத்திடம், தகன மேடை பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, மின்தகன மேடை அமைக்கும் பணிகள் முடிவுற்று வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.
இதனை சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன், வட்டாட்சியா் அசோக்குமாா், சுகாதார ஆய்வாளா் ரவீந்திரன், பேரூராட்சி செயல் அலுவலா் டாா்த்தி ஆகியோா் பாா்வையிட்டனா். இதில், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.