தூய்மைப் பணியாளா்களுக்கு எம்எல்ஏ நிவாரணப் பொருள்கள் விநியோகம்
அதியமான் கோட்டையில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வழங்கினாா்.
அதியமான் கோட்டையில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வழங்கினாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குள்பட்ட அதியமான்கோட்டை ஊராட்சியில் பணியாற்றி வரும் 35 பணியாளா்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கிப் பேசினாா்.
இதையடுத்து அதியமான் கோட்டையில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில், அதியமான்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் மாரியம்மாள் முனிராஜ், பாமக மாவட்டச் செயலா் பெரியசாமி, பாமக மாநில துணைத்தலைவா் பெ.சாந்தமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.