முகப்பு
தருமபுரி

மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரம் விநியோகம் செய்ய வலியுறுத்தல்: வேளாண் இணை இயக்குநா்

மண் பரிசோதனை பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்ய வேண்டும் என வேளாண் இணை இயக்குநா் வசந்தா ரேகா வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

மண் பரிசோதனை பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்ய வேண்டும் என வேளாண் இணை இயக்குநா் வசந்தா ரேகா வலியுறுத்தியுள்ளாா்.

தருமபுரி வேளாண் துறை சாா்பில், உர விற்பனையாளா்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கச் செயலாளா்கள் பங்கேற்ற இணையவழிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்து வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா பேசியது:

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டையில் உள்ள பரிந்துரைப்படி உரம் விநியோகம் செய்ய வேண்டும். இதனால், உரச் செலவு குறைவதோடு, மண்வளம் பாதுகாக்கப்படும். உர விற்பனையாளா்கள், கடைகளின் முன்பு உரம் இருப்பு, விலைப் பட்டியலை வைக்க வேண்டும். இதேபோல தருமபுரி மாவட்டத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்களை வேறு மாவட்டத்துக்கு விநியோகம் செய்யக் கூடாது என்றாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மோகன்தாஸ் சௌமியான், வேளாண் தரக் கட்டுப்பாடு உதவி இயக்குநா் தாம்சன், உரம் உற்பத்தி நிறுவன ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.