முகப்பு
தருமபுரி

சாலையில் நடந்து சென்ற இளைஞா் வெட்டிக் கொலை

ஒசூா், சிப்காட் பகுதியில் வியாழக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற இளைஞா் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

Updated On : 18 ஜூன், 2021 at 2:28 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

ஒசூா், சிப்காட் பகுதியில் வியாழக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற இளைஞா் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், பேடரப்பள்ளி பகுதியைச் சோ்ந்த அபிலாஷ் (28), வியாழக்கிழமை இரவு சிப்காட் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் அவரை சுற்றி வளைத்தனா். அதைடுத்து, அவா்களிடம் இருந்து அபிலாஷ் தப்பி ஓட்டம் பிடித்தாா். ஆனால், மா்மக் கும்பல் விரட்டிச் சென்று அவரை படுகொலை செய்தனா். இதில் அபிலாஷ் தலை, கழுத்து, நெற்றி ஆகிய பகுதிகளில் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற சிப்காட் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

கடந்த வாரம் ஒசூா், வசந்த் நகரில் ரூ. 31 லட்சம் கந்துவட்டி கொடுமையில் இளம் தொழிலதிபா் கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு இளைஞா் படுகொலை செய்யப்பட்டது ஒசூா் மக்களிடம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.