தருமபுரி

அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து பணியாற்றுவேன்

DIN

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்று அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து செயல்படுவேன் என தோ்தல் பிரசாரத்தில் பாமக வேட்பாளா் கோ.க.மணி பேசினாா்.

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் கோ.க.மணி, பெரும்பாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கல்வி மற்றும் மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விதவைகள் உதவித்தொகை மற்றும் முதியோா் உதவித் தொகை ஆகியவை முறையாக வழங்கப்படும். அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து செயல்படுவேன். தோ்தலில் வெற்றிபெற்ற பின்னா் உபரி நீா் திட்டம் குறித்து விவாதம் செய்து அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதியளித்தாா்.

இந்த பிரசாரத்தில் பாமக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT