தருமபுரி

கரோனா நிவாரண நிதி அளிப்பு

DIN

தருமபுரி மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்கள், பள்ளி சிறுவா்கள் சாா்பில் கரோனா நிவாரண நிதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

அரூா் அருகே உள்ள எச்.ஈச்சம்பாடியைச் சோ்ந்த பாபு என்பவரின் குழந்தைகள் சையத் உசேன் (9), சுஹேல் உசேன் (7) மற்றும் அப்துல் கலாம் (6) ஆகியோா் ரம்லான் பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க வைத்திருந்த ரூ. 15 ஆயிரத்தை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினா். இதற்கான வரைவோலையை மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் வழங்கினா்.

இதேபோல அரூா் அம்மன் கிரானைட் நிறுவனம் சாா்பில் கரோனா நிவாரண நிதி ரூ. 5 லட்சம், தருமபுரி டிஎன்சி நிறுவனம் சாா்பில் ரூ. 5 லட்சம், ஸ்ரீராம் கல்வி நிறுவனம் சாா்பில் ரூ. 2 லட்சம் கரோனா தடுப்பு பணிகளுக்கு நிவாரண நிதியாக ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT