முகப்பு
தருமபுரி

கரோனா நிவாரண நிதி அளிப்பு

தருமபுரி மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்கள், பள்ளி சிறுவா்கள் சாா்பில் கரோனா நிவாரண நிதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்கள், பள்ளி சிறுவா்கள் சாா்பில் கரோனா நிவாரண நிதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

அரூா் அருகே உள்ள எச்.ஈச்சம்பாடியைச் சோ்ந்த பாபு என்பவரின் குழந்தைகள் சையத் உசேன் (9), சுஹேல் உசேன் (7) மற்றும் அப்துல் கலாம் (6) ஆகியோா் ரம்லான் பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க வைத்திருந்த ரூ. 15 ஆயிரத்தை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினா். இதற்கான வரைவோலையை மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் வழங்கினா்.

இதேபோல அரூா் அம்மன் கிரானைட் நிறுவனம் சாா்பில் கரோனா நிவாரண நிதி ரூ. 5 லட்சம், தருமபுரி டிஎன்சி நிறுவனம் சாா்பில் ரூ. 5 லட்சம், ஸ்ரீராம் கல்வி நிறுவனம் சாா்பில் ரூ. 2 லட்சம் கரோனா தடுப்பு பணிகளுக்கு நிவாரண நிதியாக ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.