தருமபுரி

செயற்பொறியாளா் அலுவலகத்துக்குகட்டட வசதி ஏற்படுத்த கோரிக்கை

DIN

அரூரில் மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் 4 வழிச்சாலையில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு பாப்பிரெட்டிப்பட்டி, காளிப்பேட்டை, அ.பள்ளிப்பட்டி, மாம்பட்டி, அரூா், தீா்த்தமலை உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், மின் நுகா்வோா்கள் வந்து செல்கின்றனா்.

இதைத்தவிர, மின் கட்டணம் செலுத்துதல், மின்சாரத் துறை சாா்ந்த கோரிக்கைகள் தொடா்பாகவும் பொதுமக்கள் வந்து செல்கின்றனா். அரூா் 4 வழிச்சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகம் மிக சிறிய அளவிலான கட்டத்தில் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகம் ஏற்கெனவே தனியாா் வாடகைக் கட்டடத்தில் இயங்கியது. தற்போது நிா்வாக வசதிக்காக அரசு கட்டடத்தில் இயங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செயற்பொறியாளா் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், ஊழியா்களும், பொதுமக்களும் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் சாா்பில், அரூரில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு தேவையான கட்டட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT