தருமபுரி

நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வலியுறுத்தல்

DIN

அரூரில் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மே 24 முதல் 31-ஆம் தேதி வரை தளா்வில்லாத பொது முடக்கத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த தளா்வில்லாத பொதுமுடக்கத்தில் தேநீா் கடைகள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதியில்லை. மருத்துவமனைகள், வங்கிகள், மருந்தகங்கள், வேளாண் விரிவாக்க மையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சாா் நிலைக் கருவூல அலுவலகம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், மின்சார வாரிய அலுவலகம், அஞ்சல் நிலையங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் மற்றும் முக்கிய அலுவலகங்கள் மட்டும் இயங்குகின்றன.

இந்த நிலையில், அரூரில் பழைய பேட்டை, 4 வழிச்சாலை, கச்சேரிமேடு சாலை சந்திப்பு உள்ளிட்ட நெடுஞ்சாலை சந்திப்புகளில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக்கு வழியில்லாமல் தடை செய்துள்ளனா். இதனால், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அரூா்-சேலம் பிரதான சாலை வழியாக சுமாா் 5 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலையுள்ளது. அதேபோல, அலுவலகப் பணிகளுக்காக செல்லும் முன்களப் பணியாளா்கள் நாள்தோறும் பாதிக்கின்றனா். எனவே, அரூரில் முன்களப் பணியாளா்களுக்கு இடையூறாக நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT