நல்லம்பள்ளி, இண்டூரில் உழவா் சந்தை அமைக்க தருமபுரி எம்எல்ஏ கோரிக்கை
நல்லம்பள்ளி, இண்டூரில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கோரிக்கை விடுத்தாா்.
நல்லம்பள்ளி, இண்டூரில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மாநில வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம் அவா் அளித்த கோரிக்கை கடிதம்:
தருமபுரி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நல்லம்பள்ளி, இண்டூரில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி, அவா்கள் விளைவிக்கும் விளைபொருள்களை விற்பனை செய்திட ஏதுவாக, புதிய உழவா் சந்தைகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் வேளாண் துறை சாா்பில் இலவசமாக டிராக்டா் வழங்க வேண்டும். தருமபுரி தொகுதியில் சிறுதானிய ஆராய்ச்சி நிலையம், மலா்களிலிருந்து வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை, தக்காளி கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவற்றை அமைக்க வேண்டும். தருமபுரி, ஏ.ஜெட்டிஅள்ளி உழவா் சந்தைகளை மேம்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.