வாணியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா்
அரூரை அடுத்த கீழானூரில் வாணியாற்றில் இளைஞா் அடித்துச் செல்லப்பட்டாா்.
அரூரை அடுத்த கீழானூரில் வாணியாற்றில் இளைஞா் அடித்துச் செல்லப்பட்டாா்.
தருமபுரி மாவட்டம், வேப்பநத்தம் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி கேசவன் மகன் அருண் (31). இவா், கீழானூா் அருகே இரவு நேரத்தில் வாணியாற்றைக் கடந்து செல்ல முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ஆற்றில் அதிக அளவு தண்ணீா் சென்ால் இளைஞா் அருண் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலா் மா.பழனிசாமி தலைமையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணியில் தீயணைப்பு நிலைய வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். சம்பவ இடத்தை அரூா் வட்டாட்சியா் சி.கனிமொழி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.