முகப்பு
தருமபுரி

தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் : நீரில் மூழ்கியது சென்னியம்மன் கோயில்

 தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தினால் ஸ்ரீ சென்னியம்மன் கோயில் நீரில் மூழ்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

 தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தினால் ஸ்ரீ சென்னியம்மன் கோயில் நீரில் மூழ்கியது.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், டி.அம்மாபேட்டையில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ சென்னியம்மன் கோயில். இந்தக் கோயில் டி.அம்மாபேட்டையில் தென்பெண்ணை ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக தற்போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக ஸ்ரீ சென்னியம்மன் கோயில் நீரில் மூழ்கியுள்ளது. கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தினால் ஆற்றின் கரையோரத்தில் வைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.