முகப்பு
தருமபுரி

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

அரூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

அரூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்த் (29), வியாழக்கிழமை காலை அவரது விவசாய நிலத்தில் உள்ள திறந்தவெளிக் கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் மா.பழனிசாமி தலைமையிலான வீரா்கள், சுமாா் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு இளைஞா் ஆனந்த்தை சடலமாக மீட்டனா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.