அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை
அரூா் வட்டாரப் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரூா் வட்டாரப் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், நரிப்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் (கே.கே. 168) சாா்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுத்திருந்தனா். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் 26.07.2021-இல் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் முடிவின்படி, தருமபுரி மாவட்டத்தில் வரும் சம்பா பருவத்தில் நெல் மகசூல் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பிருப்பதால், அரூா் வட்டாரத்தை மையப்படுத்தி அரசு சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.