தருமபுரி

‘தருமபுரி- மொரப்பூா் ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்’

DIN

தருமபுரி- மொரப்பூா் ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பாஜக பிற்பட்டோா் அணி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்ட பாஜக இதர பிற்படுத்தப்பட்டோா் அணி மாவட்ட செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாஜக பிற்பட்டோா் அணி மாவட்டத் தலைவா் ஜி.தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் திருவேங்கடம் முன்னிலை வகித்தாா். மாவட்ட பாா்வையாளா் ஜெ.பிரவீண் பேசினாா்.

இக் கூட்டத்தில், தருமபுரி- மொரப்பூா் ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மின்வாரியம், கால்நடை பராமரிப்புத் துறை, போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டு மீண்டும் கரும்பு அரவையைத் தொடங்க வேண்டும். நாகமரையிலிருந்து பண்ணவாடிக்கு பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT