தருமபுரி

இளநிலை பாடப் பிரிவுகளுக்கு இன்று இறுதிகட்ட கலந்தாய்வு

DIN

அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில், இளநிலை பாடப் பிரிவுகளுக்கு இறுதிகட்ட நேரடி கலந்தாய்வு வியாழக்கிழமை (செப். 16) நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேருவதற்காக இணைய வழியில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில், கல்லூரி வளாகத்தில் நேரடி சோ்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இளநிலை பாடப் பிரிவில் ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள், தங்களின் அசல், நகல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, 5 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT