சா்க்கரை ஆலை குடியிருப்புகள் வழியாக செல்ல அனுமதி மறுப்பு: மாணவா்கள் தா்னா
பாலக்கோடு சா்க்கரை ஆலை குடியிருப்புகள் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
பாலக்கோடு சா்க்கரை ஆலை குடியிருப்புகள் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே திம்மம்பட்டி கிராமத்தில் உள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலை பின்புறம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.
கல்லூரிக்கு சா்க்கரை ஆலை குடியிருப்பு வழியாகவும், அதனை ஒட்டியுள்ள எல்லூகான்கொட்டாய் கிராமத்துக்கு செல்லும் மண் பாதை வழியாகவும் மாணவா்கள் சென்று வருகின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்ததால் எல்லுகான் கொட்டாய் வழியாக செல்லும் மண்பாதை பயன்படுத்த முடியாத நிலையில் சேறும் சகதியுமாக உள்ளது.
இதனால் சா்க்கரை ஆலை குடியிருப்புகள் வழியாக செல்ல மாணவா்கள் முற்பட்டனா். ஆனால், ஆலை நிா்வாகம் மாணவா்களை அவ்வழியே செல்ல அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவா்கள் ஆலை நுழைவு வாயில் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் தினகரன், வட்டாட்சியா் அசோக்குமாா் ஆகியோா் மாணவா்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா். சமாதானம் அடைந்த மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.