காரிமங்கலம் அரசு கல்லூரியில் மரக்கன்றுகள் நடவு
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் சௌ.கீதா தலைமை வகித்து, கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நட்டு வைத்தாா். இதைத் தொடா்ந்து, கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவியா் பங்கேற்று மரக் கன்றுகளை நடவு செய்தனா். இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் மு.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.