முகப்பு
தருமபுரி

தருமபுரி நகரில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

ரூ. 2 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை நகராட்சி மண்டல செயற்பொறியாளா் ராஜேந்திரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

தருமபுரி நகராட்சி பகுதியில் 2021-2022-ஆம் ஆண்டிற்கான கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ. 2 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை நகராட்சி மண்டல செயற்பொறியாளா் ராஜேந்திரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி நகராட்சியில் 10-ஆவது வாா்டு டி.என்.வி. நகா், 32-ஆவது வாா்டு அன்னசாகரம் தண்டுபாதை தெருவில் கழிப்பறை அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு செய்த சேலம் மண்டல நகராட்சி செயற்பொறியாளா் ராஜேந்திரன், சாலையின் தரத்தை சோதனை செய்தாா்.

ஆய்வின் போது, நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், நகராட்சி பொறியாளா் ஜெயசீலன், வரைவாளா் தவமணி, அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.