தருமபுரி

அரூரில் 57 மி.மீ. மழை பதிவு

DIN

அரூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு 57 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் மேல்நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி உள்பட தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இந்த மழையானது அரூரில் 57 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இதேபோல அரூா் வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் மிதமான மழை பெய்தது.

மழை காரணமாக விவசாய நிலங்களிலும், சாலையோர தாழ்வானப் பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஆடிப்பட்டத்தில் நெல் நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT