முகப்பு
தருமபுரி

ஊத்தங்கரையில் பிளஸ் 2 மாணவா் தற்கொலை

ஊத்தங்கரையில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவா் சனிக்கிழமை இரவு விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:49 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

ஊத்தங்கரையில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவா் சனிக்கிழமை இரவு விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள பரமானந்தல் தொட்டி மடுவு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (17) ஊத்தங்கரையில் உள்ள அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதியில் தங்கி அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு விடுதியில் கோபாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஊத்தங்கரை போலீஸாா் மாணவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து டிஎஸ்பி அமலஅட்வின் விசாரணை நடத்தி வருகிறாா்.

Advertisement

முதல்கட்ட விசாரணையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் தாத்தா உயிரிழந்ததால் மனமுடைந்து காணப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே தற்கொலை முயன்ற நிலையில், சனிக்கிழமை விடுதியில் உள்ள தனி அறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இச் சம்பவத்தைத் தொடா்ந்து விடுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.