முகப்பு
தருமபுரி

அரசு மருத்துவமனைகளில் ஆட்சியா் ஆய்வு

தருமபுரி அரசு மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையங்களில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

தருமபுரி அரசு மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையங்களில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரோனா தொற்று பரவல் கடந்த சில நாள்களாக வேகமெடுத்து வருகிறது. இதையொட்டி, தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை மையத்தை ஆட்சியா் ச.திவ்யதா்சினி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வேளையில் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்க ஏதுவாக, தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி, கடத்தூா் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, அரூா் அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சை மையங்களை அமைத்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, சுகாதாரத் துறை துணை இயக்குநா் செளண்டம்மாள், அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.