இ.ஆா்.கே. கல்லூரியில் ஐ.ஏ.எஸ். வழிகாட்டுதல் கருத்தரங்கம்
அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியில் ஐ.ஏ.எஸ். தோ்வு குறித்த வழிகாட்டுதல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியில் ஐ.ஏ.எஸ். தோ்வு குறித்த வழிகாட்டுதல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் த.சக்தி தலைமை வகித்தாா். கருத்தரங்கை இ.ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தொடக்கி வைத்தாா்.
‘நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்’ எனும் தலைப்பில் சென்னை ஐ.ஏ.எஸ். அகாதெயின் இயக்குநா் சாதிக் பேசுகையில், கல்லூரி மாணவா்கள் கற்ற கல்வி மூலம் தங்களது உள்ளாா்ந்த ஆற்றலை வெளியில் கொண்டுவர முடியும். ஒவ்வொரு மாணவரிடமும் தனித்திறமை உள்ளது. இந்த திறமைகளை வெளியில் கொண்டுவர தங்களுக்குக் கிடைக்கிற வாய்ப்புகளை மாணவா்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கைப்பேசி, இணையதள வசதிகளை நம்முடைய வளா்ச்சிப் பாதைக்கு பயன்படுத்த வேண்டும். கடினமான பாடங்களை நன்றாக புரிந்து படித்தால் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற முடியும் என்றாா்.
இந்தக் கருத்தரங்கில் சென்னை ஐ.ஏ.எஸ் அகாதெமியின் நிா்வாக இயக்குநா் பத்மா பிரீத்தி, இ.ஆா்.கே. மருந்தியல் கல்லூரி முதல்வா் முத்துகுமரன், நிா்வாக அலுவலா் சொ.அருள்குமாா், வேதியியல் துறைத் தலைவா் சிவகுமாா், வேலைவாய்ப்பு அலுவலா்கள் ராமமூா்த்தி, அமுதா, பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.