முகப்பு
தருமபுரி

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலா் தா.தாமோதரன் தலைமை வகித்து, சாலையில் வாகனங்களை இயக்கும்போதும், சாலையைக் கடக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்து பேசினாா்.

நிகழ்ச்சியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் வெங்கடசாமி, பறக்கும் படை ஆய்வாளா் கதிா்வேல், பள்ளி தலைமை ஆசிரியா் சேகா், பேரூராட்சித் தலைவா் வெங்கடேசன், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.