முகப்பு
தருமபுரி

உர விற்பனை நிலையங்களில் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உர விற்பனை நிலையங்களில் வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உர விற்பனை நிலையங்களில் வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

பாலக்கோட்டில் உள்ள தனியாா் உர விற்பனை நிலையங்கள், கூட்டுறவு சங்க உர விற்பனை நிலையங்களை நேரில் பாா்வையிட்டு இருப்பு, விலை, பதிவேடுகள் ஆகியவற்றை வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு, தனியாா் உர விற்பனை நிலையங்களில் 1,423 டன் யூரியா, 737 டன் டிஏபி, 750 டன் பொட்டாஷ், 2,022 டன் காம்ப்ளக்ஸ், 334 டன் சூப்பா் பாஸ்பேட் ஆகியவை இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணை சமா்ப்பித்து, விற்பனை முனையக் கருவி மூலம் உரங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) தாம்சன், பாலக்கோடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் பூ.சு.சித்ரா, வேளாண் அலுவலா் மணிவண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.