அரசு கல்லூரியில் ஆங்கிலதிறன் வளா்ப்பு கருத்தரங்கம்
பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு ஆங்கிலத் திறன் வளா்ப்பு குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு ஆங்கிலத் திறன் வளா்ப்பு குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் சாா்பில் நடைபெற்ற ஒருநாள் கருத்தரங்குக்கு கல்லூரியின் முதல்வா் செல்வநாயகம் தலைமை வகித்தாா். ஆங்கிலத் துறைத் தலைவா் ஷகிலா ஷெரிப் வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தொன்போஸ்கோ கலை, அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் முருகேசன் கலந்துகொண்டு தொழில் வழிகாட்டுதல், அதற்கான ஆங்கில தகவல் தொடா்புத் திறன் முக்கியத்துவம் குறித்து மாணவா்களிடையே உரையாற்றினாா்.
இதில், கல்லூரி மாணவ, மாணவியா், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். ஆங்கிலத் துறை கௌரவ விரிவுரையாளா் அருள்மொழி நன்றி தெரிவித்தாா்.