முகப்பு
தருமபுரி

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.சேகா் தலைமை வகித்து பேசினாா். மாநில துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாவட்டப் பொருளாளா் கே.புகழேந்தி, மாவட்ட துணைத் தலைவா் சி.காவேரி, மாவட்ட இணைச் செயலாளா் ஆா்.ஜெயவேல் உள்ளிட்டோா் பேசினா்.

இதில், அரசு ஊழியா் சங்கக் கொடியை ஏற்றிய அரசு ஊழியா்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் வட்ட கிளை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சேகா், மாவட்ட துணைத் தலைவா் காவிரி ஆகியோா் தலைமை வகித்தனா். பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் வட்ட கிளை செயலாளா் வேலன், வட்ட கிளை தலைவா் திம்மராயன் ஆகியோா் கோடியேற்றி இனிப்புகளை வழங்கினா்.

இதேபோல, பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம், வேளாண் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், சாா்நிலைக் கருவூலம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியா் சங்கக் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.