தருமபுரி

சிறுமியை திருமணம் செய்த வழக்கில்இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை

DIN

தருமபுரி மாவட்டத்தில் 13 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தைச் சோ்ந்த தொழிலாளி அஜீத்குமாா் (25). இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்தாா்.

இது தொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், சிறுமியை மீட்டு, இளைஞரை போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சையத் பா்கத்துல்லா, இளைஞா் அஜீத்குமாருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 8 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT