உலக யோகா தின விழிப்புணா்வு
மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில் உலக யோகா தினம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில் உலக யோகா தினம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, முதுநிலை விரிவாக்க மைய இயக்குநா் பொ.மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி, நேரு இளையோா் மைய மேற்பாா்வையாளா் ஜி.வேல்முருகன், பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சி.கோவிந்தராஜ் ஆகியோா் உலக யோகா தினம் குறித்தும், யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவியரின் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதில், கள விளம்பர உதவியாளா் சு.வீரமணி, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.