முகப்பு
தருமபுரி

தருமபுரியில் மே 29-இல் திமுக செயற்குழுக் கூட்டம்

தருமபுரியில் வரும் மே 29-ஆம் தேதி மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

தருமபுரியில் வரும் மே 29-ஆம் தேதி மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வரும் மே 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம், கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, இந்த செயற்குழுக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா், மக்களவை முன்னாள் உறுப்பினா்கள், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.