தருமபுரி

பாலக்கோடு காப்புக் காட்டில் பெண் யானை உயிரிழப்பு

DIN

பாலக்கோடு அருகே காப்புக்காட்டில் பெண் யானை உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கேசர்குளி காப்புக் காட்டில் கடந்த 21-ஆம் தேதி யானைகளுக்கிடையே சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் ஆண் யானை தனது தந்தத்தால் 22 முதல் 24 வயது மதிக்கதக்க பெண் யானையின் வயிற்றில் குத்தியுள்ளது.

இதனால் பலத்த காயம் ஏற்பட்டு பெண் யானை  உயிரிழந்தது. இதையறிந்த பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் காப்புக் காட்டுக்கு நேரில் சென்று யானை இறந்ததை உறுதி செய்தார். 

இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு, கன்சால்பைல் கிராம திட்டத் தலைவர் பச்சையப்பன் முன்னிலையில் கால்நடை மருத்துவ நிபுணர் பிரகாஷ் மற்றும் மருத்துவர்கள் உயிரிழந்த பெண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். 

இதையடுத்து யானையின் உடலை வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT