தருமபுரி

கருவூலக் காலனியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி ஊராட்சி, கருவூலக் காலனியில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி ஊராட்சி, கருவூலக் காலனியில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது கருவூலக் காலனி. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக் காலனியில் கான்கிரீட் சாலை சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இச்சாலை தற்போது பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதேபோல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இச்சாலையின் நடுவே குடிநீா் குழாய் அமைக்கப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட சாலையை சரிவர சீரமைக்காமல் ஆங்காங்கே மண் சரிந்து, வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீா்க் கால்வாய் முறையாக சுத்திகரிக்கப்படாமல் உள்ளது.

எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி, கருவூலக் காலனியில் கழிவுநீா்க் கால்வாயை புதுப்பித்து, பழுதடைந்த கான்கிரீட் சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT