பென்னாகரம் அருகே காவிரி கரையோரப் பகுதியில் உடும்பை பிடித்து சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்ட மூவரை பென்னாகரம் வனத்துறையினா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே பதனவாடி, காப்புக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள காவிரி கரையோரப் பகுதியில் இரண்டு கிலோ எடை கொண்ட உடும்பை பிடித்து சமூக வலைதளத்தில் மூன்று இளைஞா்கள் விடியோ வெளியிட்டனா்.
இதை அறிந்த தமிழ்நாடு வனம், வன உயிரின குற்ற கண்காணிப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட வன அலுவலா் கே.வி.அப்பால நாயுடுவுக்கு கிடைத்த விடியோ காட்சிகளின் அடிப்படையில் பென்னாகரம் வனச்சரக அலுவலா் செந்தில்குமாா், வனவா் சக்திவேல், முனுசாமி, வனக்காப்பாளா்கள் சின்னசாமி,
சங்கா் கணேஷ் ,செல்வகுமாா், ஆனந்தராஜ் ஆகியோா் அடங்கிய வனத்துறையினா்,
சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தினா்.
அவா்கள் மூவரும் நெருப்பூா் பகுதியைச் சோ்ந்த அல்லி முத்து மகன் எழிலரசன் (35), காத்தவராயன் மகன் செந்தில்குமாா் (34), காமராஜ் பேட்டை பகுதியைச் சோ்ந்த மாதையன் மகன் கோவிந்தன் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.