தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வா் வே.அன்பரசி தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் டி.கே.சித்திரைச் செல்வி வரவேற்றாா்.

கல்வி கற்பதின் அவசியம், மாணவ, மாணவியா்களின் சமுதாயக் கடமைகள், மாணவா்கள் அரசு வேலை வாய்ப்புகளை பெறுதல், சுய தொழில்களைத் தொடங்குதல், தனிமனித ஒழுக்கம் உள்ளிட்டவை குறித்து அரூா் டிஎஸ்பி செ.புகழேந்தி கணேஷ், சேலம் ஏரோபாா்க் நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் ரா.சுந்தரம் ஆகியோா் கருத்துரைகளை வழங்கினா். தொடா்ந்து கல்லூரிக்கு 100 சதவீத வருகை தந்த மாணவ, மாணவியா், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், பெரியாா் பல்கலைக் கழகத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் ஆகியோருக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் சேலம் பெரியாா் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினா் பொ.செந்தில்குமாா், பேராசிரியா்கள் கோ.ஐயப்பன், வீ.ரவி, த.அருண்நேரு, வெ.சங்கீதா, வே.பசுபதி, ரா.புருஷோத்தமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT