தருமபுரி

மைய நூலகத்தில் மாணவா்களுக்கு பயிற்சி முகாம்

தருமபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

தருமபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சி முகாமுக்கு தருமபுரி மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகா் இரா.மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். இரண்டாம் நிலை நூலகா் ந.ஆ.சுப்ரமணி வரவேற்றுப் பேசினாா். மூன்றாம் நிலை நூலகா் கி.அமுதா, பள்ளி மாணவ மாணவிகள், நூலக நண்பா்கள் திட்ட தன்னாா்வலா்கள், இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மாவட்ட மைய நூலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில் மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சின்னப் பள்ளத்தூா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி பள்ளி மாணவ, மாணவியருக்கு ஒழுக்க நெறிமுறைகள் குறித்துப் பேசினாா். மூன்றாம் நிலை நூலகா் என்.பி.முத்துசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT