முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் மழை

பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை கனமழை பெய்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:10 AM
பகிர்:


பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை கனமழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பென்னாகரம், ஏரியூா், சின்னம்பள்ளி, பெரும்பாலை, தாசம்பட்டி, ஒகேனக்கல், பி.அக்ரஹாரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கன மழை பெய்தது.

மழை காரணமாக வயல்வெளிகள், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீா் தேங்கி காணப்பட்டது. பென்னாகரம் பகுதியில் அவ்வப்போது திடீரென மழை பெய்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாமை பயிா் செய்துள்ள விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா். பென்னாகரம் பகுதியில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments