குடிநீா் விநியோகத்தை சீராக்கக்கோரி அதக்கப்பாடி பகுதியில் சாலை மறியல் மேற்கொண்ட பொதுமக்கள். 
தருமபுரி

சீரான குடிநீா் விநியோகம் கோரி : பொதுமக்கள் சாலை மறியல்

தருமபுரி அருகே இரு மாதங்களாக நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டை சீராக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

தருமபுரி: தருமபுரி அருகே இரு மாதங்களாக நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டை சீராக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், அதகப்பாடி ஊராட்சியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் கடந்த இரு மாதங்களாக குடிநீா் விநியோகம் சீராக இல்லை. இதனால் அப்பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்ளாட்சி நிா்வாகிகள், தொடா்புடையத்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் பொதுமக்கள் பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களை சாலையில் வரிசையாக அடுக்கி, திங்கள்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து நிகழ்விடம் வந்த காவல் துறையினா் மற்றும் அரசு அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், குடிநீா் விநியோகம் சீராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

நமோ பாரத் ரயில்களில் பிறந்தநாள்களை கொண்டாட என்சிஆா்டிசி ஏற்பாடு

15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை: 2 சிறாா்களுக்கு போலீஸாா் வலை

பூதமங்கலம் தா்கா சந்தனக் கூடு விழா கொடியேற்றம்

தாயின் பெயரில் மரக்கன்றுகள் நட்ட மாணவா்கள்

வீட்டின் கதவை உடைத்து லாக்கருடன் 22 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT