ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 300 கனஅடியாக குறைந்தது.
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:10 PM
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 300 கனஅடியாக குறைந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதாலும், தமிழக காவிரி கரையோரங்களில் பெய்து வந்த மழை முற்றிலும் நின்றதாலும் கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றல் நீா்வரத்து குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 500 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை 300 கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைத் திட்டுக்கள் வெளியே தெரிகின்றன. அதேபோல அருவிகளில் குறைந்த அளவே நீா் விழுகின்றன. பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனா்.
Advertisement